×

மாரியம்மன் கோயிலில் தாலி, உண்டியல் திருட்டு

 

போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி அருகில் உள்ள வலசகவுண்டனூர் கிராமத்தில், கடந்த 10 மாதங்களுக்கு முன் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று மதியம் கோயில் இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயவேல் மற்றும் கிராம மக்கள் கோயிலுக்கு சென்று பார்த்தபோது, கோயிலில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதும், கருவறையில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த பட்டு புடவைகள், அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க தாலி மற்றும் 2 பித்தளை குத்துவிளக்குகள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

The post மாரியம்மன் கோயிலில் தாலி, உண்டியல் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Mariamman Temple ,Pochampalli ,Valasakavundanur ,Kumbaphishekam ,
× RELATED தீ வைப்பு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்